Thenmozhi New Kavithaigal



துயரங்களில் மூழ்கி உள்ளேன்
துயரங்களை தீர்க்க யாருமில்லை
துன்பங்களையே கண்டுள்ளேன்
இன்பத்தை என் வாழ்வில் தர கடவுளுக்கு நேரமில்லை…
என்ன வாழ்க்கை இது என நினைத்திருந்தேன்
இதுதான் வாழ்க்கை என்று
உணர்ந்துகொண்டேன்
அன்பை வழங்க தெரிந்த எனக்கு
அதை வளங்கிட தெரியவில்லை
வாழ்க்கையில் ஏமாற்றத்தை தவிர
வேறு எதையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை

 

என் இன்பங்களிலும்
துன்பங்களிலும்
என்னுடன் துணை நின்றவள்
நான் உனக்கு முட்கள் போன்று இருந்தாலும்
நீ எனக்கு மலராகவே இருந்தாய்
இப்படி என்னுடன்
நீ தோழியாக வரும்போது
நான் ஏதோ ஓரு ஜென்மத்தில்
புண்ணியம் செய்துள்ளேன்
எனத் தோன்றுகிறது
நான் சாகும்வரை
என்னுடன் நீ வருவாய் என நினைத்து விடைபெறுகிறேன்